ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள நேட்டோ படையில் இங்கிலாந்து இராணுவமும் இடம் பெற்றுள்ளது.
அப்போது அங்கு முகாமிட்டிருந்த முஜாகிதீன் மற்றும் தலிபான் தீவிரவாதிகளை வெடிகுண்டு வீசி அழித்தார். அதன்பிறகு இங்கிலாந்து திரும்பி விட்டார்.
இதில் இங்கிலாந்தின் இளவரசர் ஹாரியும் இடம்பெற்றிருந்தார். இவர் அங்குள்ள அப்பாச்சி ஹெலிகாப்டரின் விமானியாக பணிபுரிந்தார்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் குன்னார் மாகாணத்தின் தலிபான் தீவிரவாதிகளின் கமாண்டர் குவாரி நஸ்ருல்லா இங்கிலாந்தின் டெய்லி மிர்ரர் பத்திரிகைக்கு பேட்டி அளித்தார்.
அதில் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்தபோது, இளவரசர் ஹாரிதான் எங்களுக்கு முதல் இலக்காக இருந்தார், அவரை பிடிக்க குறி வைத்திருந்தோம்.
அதற்கான தீவிர முயற்சிகளிலும் ஈடுபட்டோம். இங்கிலாந்தில் வேண்டுமானால் அவர் இளவரசராக இருக்கலாம்.
ஆனால் எங்களை பொறுத்தவரை அவர் ஒரு சாதாரண இராணுவ வீரர்தான் என தெரிவித்துள்ளார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக