புத்தளத்தைச் சேர்ந்த தமிழ் வர்த்தகர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தி அவரிடமிருந்த பெருந்தொகை பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ள சம்பவமொன்று நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்களில் வந்த துப்பாக்கி தாரிகளே நேற்று இரவு 8.20 மணியளவில் இந்த தாக்குதலை நடத்திவிட்டு பணத்தொகையினையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
புத்தளம் நகரில் சில்லறை வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் 61 வயதான பரமேஸ்வரன் கந்தையா என்பவரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகி புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலை வீதியிலுள்ள வண்ணாக்குளம் பிரதேசத்தில் வசித்துவரும் குறித்த வர்த்தகர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது அவரது வீட்டின் அருகில் வைத்து இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் குறித்த வர்த்தகரிடமிருந்து 10 இலட்சம் ரூபா பணத்தொகை கொள்ளையிட்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும் பொலிஸார் அதனை உறுதிப்படுத்தவில்லை
0 கருத்துகள்:
கருத்துரையிடுக