siruppiddy

வெள்ளி, 25 அக்டோபர், 2013

தமிழ் வர்த்தகர்மீது துப்பாக்கிச் சூடு: பெருந்தொகை பணமும் கொள்ளை


புத்­த­ளத்தைச் சேர்ந்த தமிழ் வர்த்­தகர் ஒரு­வரை துப்­பாக்­கியால் சுட்டு காயப்­ப­டுத்தி அவ­ரி­ட­மி­ருந்த பெருந்­தொகை பணத்தை கொள்­ளை­யிட்டு சென்­றுள்ள சம்­ப­வ­மொன்று நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்­றுள்­ளது.

மோட்டார் சைக்­களில் வந்த துப்­பாக்கி தாரி­களே நேற்று இரவு 8.20 மணி­ய­ளவில் இந்த தாக்­கு­தலை நடத்­தி­விட்டு பணத்­தொ­கை­யி­னையும் கொள்­ளை­யிட்டுச் சென்­றுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹண தெரி­வித்தார்.

புத்­தளம் நகரில் சில்­லறை வியா­பா­ரத்தில் ஈடு­பட்­டு­வரும் 61 வய­தான பர­மேஸ்­வரன் கந்­தையா என்­ப­வரே இவ்­வாறு தாக்­கு­த­லுக்கு இலக்­காகி புத்­தளம் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

புத்­தளம் ஸாஹிரா ஆரம்ப பாட­சாலை வீதி­யி­லுள்ள வண்­ணாக்­குளம் பிர­தே­சத்தில் வசித்­து­வரும் குறித்த வர்த்­தகர் மோட்டார் சைக்­கிளில் வீடு திரும்­பிக்­கொண்­டி­ருந்­த­போது அவ­ரது வீட்டின் அருகில் வைத்து இந்த துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

எவ்­வா­றா­யினும் குறித்த வர்த்­த­க­ரி­ட­மி­ருந்து 10 இலட்சம் ரூபா பணத்தொகை கொள்ளையிட்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும் பொலிஸார் அதனை உறுதிப்படுத்தவில்லை

0 கருத்துகள்:

கருத்துரையிடுக