siruppiddy

புதன், 30 அக்டோபர், 2013

புத்தூரரில் நண்பரின் கமராவை திருடிய ஆசிரியர்:


நண்பரின் கமராவை திருடிய ஆசிரியர் மல்லாகம் நீதிமன்றத்தினால் 50,000 ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். புத்தூர் வடக்கினைச் சேர்ந்த குறித்த ஆசிரியரும் அவரது நண்பரும் மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு சென்றுகொண்டிருந்த போது,

நண்பர் தனது 24,000 ரூபா பெறுமதியான கமராவினை ஆசிரிய நண்பரிடம் கொடுத்துள்ளார். பின்னர் நண்பர் கமராவைக் கேட்டபொழுது தன்னிடம் தரவில்லையென ஆசிரியர் கூறிச் சென்றுவிட்டார். கமராவை தொலைத்தவர் உடனடியாக நெல்லியடி பொலிஸில் முறைப்பாடு செய்ததுடன்

 ஆசிரிய நண்பர் மீது சந்தேகம் இருப்பதாகவும் முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக நெல்லியடிப் பொலிஸார் ஆசிரியரிடம் விசாரணை செய்தபோது, அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில்

 திங்கட்கிழமை ஆஜர்ப்படுத்தப்பட்டார். மல்லாகம் நீதவான் நீதிபதி பஷர் முஹமட் குற்றவாளியான ஆசிரியரை 50,000 ரூபா சரீரப்பிணையில் செல்ல உத்தரவிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக