siruppiddy

புதன், 9 அக்டோபர், 2013

90 வயது வரை வாழலாம் ஏழையாக இருந்தால் போதும்!

 
ஏழையாக இருந்தால் போதும், கண்டிப்பாக 90 வயது வரை வாழலாம் என சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
பணம், வசதி இருந்தால் போதும் 90 வயது வரை வாழலாம் என்று தான் இத்தனை ஆண்டு காலமாக நம்பப்பட்டு வந்தது.
மேலும் பணக்கார நாடாக இருந்தால் வாழ்நாளும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நம்பிக்கையை தகர்க்கும் விதமாக புதிய முடிவு ஒன்று வெளியாகியுள்ளது.

நெதர்லாந்தின் லேடன் பகுதியில் முதுமை, உயிர் வாழ்தல் தொடர்பான ஆராய்ச்சி நிலையம் உள்ளது.
இதில் ஹெர்பர்ட் கிளேடன் தலைமையிலான குழு கடந்த சில ஆண்டாக தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.
அதாவது, நீண்ட காலம் உயிர் வாழ பணம் போது என்பது பற்றி தான் ஆய்வை மேற்கொண்டனர்.

இதில் வியப்பான ஒரு முடிவு கிடைத்தது. வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் வயதானவர்களில் 80 வயதை நெருங்க முடியாமல் இறந்தவர்கள் எண்ணிக்கையை கணக்கிட்டால் பணக்காரர்கள் தான் அதிகம் என்று தெரியவந்துள்ளது. அதே சமயம், ஏழைகள் பலரும் 90 வயதை தாண்டி வாழ்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.
1950ல் இருந்து 2008ம் ஆண்டு வரை அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் உட்பட 19 நாடுகளில் உள்ள இறப்பு சதவிகிதம் 0.45% (70-74 வயது) அதிகரித்து இருந்தது தெரியவந்தது.

இதேபோல, இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இதே வயதினரின் இறப்பு சதவிகிதம் மிகவும் குறைவாக இருந்தது மட்டுமல்லாமல், 90 வயது வரை வாழ்வோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது தெரியவந்தது.
இப்படி வாழ்நாள், முதுமை விஷயங்களில் ஆராய்ச்சி செய்த நிபுணர்களுக்கு நாட்டின் மொத்த உற்பத்தி மற்றும் வாழ்நாள் நீடிப்பு ஆகிய இரண்டும் எந்த வகையில் ஒத்துப்போகின்றன.

வாழ்நாளை ஒரு நாட்டின் உற்பத்தி திறன் எந்த வகையில் முடிவு செய்கிறது என்பதற்கு மட்டும் உறுதியான காரணங்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
எனவே இது தொடர்பான ஆராய்ச்சி நீடிப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக