siruppiddy

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

தொண்டமானாறு பாலம் திறப்பு200 மில்லயின் ரூபா செலவில்


இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சினால் சுமார் 200 மில்லயின் ரூபா செலவில் தொண்டமானாறு பாலம் நிர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த திறப்பு விழாவில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி திட்ட அமைச்சர் நிர்மல கொத்தலாவல மற்றும் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி ஆகியோர் கலந்துகொண்டனர்.

1990ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தின்போது இந்த பாலம் முற்றாக அழிக்கப்பட்டிருந்தது. பின்னர் தற்காலிகமாக இரும்பு பாலம் அமைக்கப்பட்டு மக்களின் போக்குவரத்து இடம்பெற்று வந்தது.

இந்த நிலையில் மஹிந்த சிந்தனையின் துரிதப்படுத்தப்பட்ட வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் யுனெப்ஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் 129 மீற்றர் நீளமும் 10 மீற்றர் அகலமும் கொண்டதாக இந்த பாலம் அமைக்கப்ட்டுள்ளது.{புகைப்படங்கள்}








 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக