siruppiddy

வெள்ளி, 18 அக்டோபர், 2013

அமைச்சரை குரங்கோடு ஒப்பிட்டு புகைப்படம்


பிரான்சின் நீதி அமைச்சரை குரங்கோடு ஒப்பிட்டு கட்சிப் பெண் ஒருவர் புகைப்படம் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு பிரான்ஸ் பகுதியில் வருகின்ற ஆண்டில் நடைபெறவுள்ள தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளராக போட்டியிட இருந்தவர் அன்னி சோபி லிகரே.
இந்நிலையில் இவர் அந்நாட்டின் நீதி அமைச்சரான கிறிஸ்டினா டாபிராவின் புகைப்படத்தையும், அருகில் ஒரு குரங்கின் புகைப்படத்தையும் இணைத்து தனது பேஸ்புக்கில் வெளியிட்டிருந்தார்.

பின்பு தனது நண்பர்களின் வற்புறுத்தலினால் அதனை நீக்கிவிட்டார். இருப்பினும் மீண்டும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அமைச்சர் ஒரு குரங்கு என்றும் அவரது புகைப்படத்தை இப்போது நீங்கள் பார்க்கிறீர்கள் எனவும் புகைப்படத்தோடு தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்த செய்தியானது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பெண் கட்சி வேட்பாளர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படவுள்ளார் என்றும் இருப்பினும் கட்சியில் அவரது பங்கு மற்றும்

ஒழுக்கம் போன்றவற்றை விசாரித்த பின்னரே அவர் நீக்கப்படுவது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று கட்சி உறுப்பினர் ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இவர் இவ்வாறு வெளியிட்டதற்கு இனவேறுபாடு பிரச்சனை தான் காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக