siruppiddy

புதன், 23 அக்டோபர், 2013

ஆபத்து ஐயோ சிறிலங்காவுக்கு !: புலம்பும் சம்பிக்க


கூடங்குளம் அணுஆலை சிறிலங்காவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடுமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார்.

 இது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவுடன் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

 ஏற்கனவே விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இந்தியா எவ்வித பதிலையும் அளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 ஜப்பானின் புக்குஷிமாவில் இடம்பெற்ற அணுக் கசிவு போன்றதொரு சம்பவம் இடம்பெறவுள்ளதாகவும் இது சிறிலங்காவுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 கூடங்குளம் அணு உலையில் கசிவு ஏற்படுகின்றதா என்பது பற்றி தொடர்ந்தும் ஆராயப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் மின் சக்தி தேவைக்கு அணு உலைகளைப் பயன்படுத்துவது குறித்து சிறிலங்கா அரசாங்கம் இதுவரையில் கொள்கை அடிப்படையிலான தீர்மானங்கள் எதனையும் எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக