siruppiddy

திங்கள், 30 டிசம்பர், 2013

ரயிலில் மோதி ஒருவர் பலி..

 கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி இன்று திங்கட்கிழமை பிற்பகல் பயணித்த நகர்சேர் கடுகதி ரயிலில் மோதி ஒருவர் பலியாகியுள்ளார்.

இந்த சம்பவம் கண்டி, சுதுஹம்பொல எனுமிடத்தில் பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
42 வயதான ஒருவரே ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் கண்டி பொது வைத்தியசாலையின் சவச்சாலையில் அடையாளம் காண்பதற்காக வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக