siruppiddy

திங்கள், 2 டிசம்பர், 2013

படைத்தலைமையக வைத்தியசாலையில் பணி புரிந்த பெண் டாக்டர் உயிரிழப்பு!


பலாலி படைத் தலைமையக வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த பெண் வைத்தியர் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.
ஹடுவென பகுதியைச் சேர்ந்த 35 வயதான சஞ்சினி பெர்ணான்டோ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பலாலி படைத் தலைமையகத்தில் அமைந்துள்ள வைத்தியசாலையில் சிவில் வைத்தியராக கடமையாற்றி வந்த இவர் இன்று காலை உடற்பயிற்சியில் ஈடுபட்ட போது மயக்கமடைந்து பலாலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக