siruppiddy

சனி, 21 செப்டம்பர், 2013

சிகரெட்டுகளை கடத்திவந்த தாயும் மகளும் தலைமறைவு


டுபாயிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 2 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட் மற்றும் அழகுசாதனப் பொருட்களை கட்டுநாயக்க சுங்க அதிகாரிகள் இன்று கைப்பற்றியுள்ளதுடன் அதனை கடத்திவந்த தாயும் மகளும் தலைமறைவாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
டுபாயிலிருந்து இலங்கைக்கு இன்று காலை வந்த மிஹின் லங்கா

விமானத்திலேயே இவை இங்கு கடத்திவரப்பட்டதாகவும் இதனை தாயும் மகளொருவருமே கடத்தி வந்ததாகவும் தெரிவிக்கும் சுங்க அதிகாரிகள் அவர்களை கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக