siruppiddy

புதன், 26 ஜூன், 2013

மூவாயிரம் ஆண்டுகள் பழைமையான அம்மிக் கல்???

 
யாழ் கந்தரோடைப் பகுதியில் இருந்து சுமார் மூவா­யிரம் ஆண்­டு­க­ளுக்கு முற்பட்ட அம்மிக்கல் ஒன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. அக்­கா­லத்தில் பயன்ப­டுத்­தப்­பட்ட மண்சட்டி, பானை­களின் ஓட்டுத் துண்­டுகள் மற்றும் கல் மணிகள் என்­ப­னவும் அந்த இடத்துக்கு அருகாமையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த நவம்பர் மாதம் கந்தரோடைப் பகுதியில் மேற்கொண்ட அகழ்வாராய்சியின் போது இந்த தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன.
அதனையடுத்து இப்பொருட்கள் எக்காலத்துக்குரியவை என்பதை கண்டுபிடிப்பதற்காக அவற்றின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, தமிழ்நாடு தஞ்சாவூர் தமிழ்ப் பல்­க­லைக்­ க­ழ­கத்­திற்கு கடந்த டிசம்பர் மாதம் ஆய்­விற்­காக அனுப்பி வைத்­தனர்.
ஆய்வின் முடிவில் அம்மிக் கல் கிறிஸ்துவுக்கு முன் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கண்ட
றியப்பட்டுள்ளது. ஓட்டுத் துண்டுகள் சுமார் 25௦௦ ஆண்டு­களுக்கு முற்பட்டவை எனக் கண்டறியப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக கல்வெட்டுக்கள் மற்றும் தொல்லியல் பேராசி­ரியர் கலாநிதி மா. பவானி இதனை ஆய்விற்கு உட்படுத்தி இருந்தார்.
தரையிலிருந்து நாலடி ஆழத்தில் தோண்டும்போதே நான்கு கால்களையுடைய இந்த அம்மிக்கல் கண்டுபிடிக்கப்பட்டது.
அத்துடன் கல் மணிகள், பானை ஓடுகள், ரோமானியர்களின் நாணயங்கள் இரண்டாயிரத்து 300 ஆண்டுகள் பழமையான சுடுமண்ணினால் செய்யப்பட்ட சீன நாட்டின் பானை ஓடுகள், தாழி ஓடுகள், கறுப்புச் சிவப்­புப்­பானை ஓடுகள் போன்ற பொருட்­களும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டதாக அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவ்வம்மிக் கல்லின் மாதிரியை இந்தியா, தமிழ் நாட்டில் கொடுமலை, கன்னியாகுமரி போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட தமிழர்களின் பாரம்­ப­ரிய அம்மிக் கல்­லுடன் ஒப்­பிட்டுப் பார்த்­த­போது அவற்றுடன் இந்தக் கல்லும் ஒத்துப்போவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனாலேயே இவ்வகழ்வாராய்ச்சியின் முடிவை உடனடியாக அறிவிக்க முடியவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக