வரலாற்று சிறப்புமிக்க நவக்கிரி கிராமத்தில் உள்ள நிலாவரை என்ற கிணற்றில் இருந்து புத்தூர் பிரதேசத்தில் உள்ள நிலாவரை என்ற ஆழத்தை கண்டுப்பிடிக்க முடியாத கிணற்றில் இருந்து 21 கிலோ மீற்றர் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீரை பெற்று கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிணறு அமைந்துள்ள பிரதேசம் தொல்பொருள் ஆராச்சி திணைக்களத்திற்கு சொந்தமான பகுதியாகும். அந்த பகுதியில் வேறு நிர்மாணப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமாயின் திணைக்களத்திடம் அனுமதிபெற வேண்டும்.
யாழ்ப்பாண மாவட்ட நீர் வழங்கல் வடிக்காலமைப்பு அதிகாரிகள் அதற்கான அனுமதியை பெற்று கொள்ள முடியாது பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த நிலையில், தொல் பொருள் திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அதிகாரியான ஜயந்த விஜேரடனவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்திய அதிகாரிகள், தொல் பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் செனரத் திஸாநாயக்கவிடம் இருந்து அதற்கான அனுமதியை பெற்றுள்ளனர்.
இதனையடுத்து, உடனடியாக நீர் வழங்கல் திட்டத்தை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் புத்தூர் பிரதேசத்தை சூழவுள்ள 21 கிலோ மீற்றர் சுற்று வட்டாரத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு குடிநீர் கிடைக்கும் என பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
யாழ்.மாவட்டத்தின் விவசாய உற்பத்திப்
பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய விசேட திட்டம் குறித்து ஆய்வு
யாழ். மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற விவசாய உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.
இன்றைய தினம் பொது நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலுக்கு விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் சிவகுமார் தலைமை தாங்கினார்.
குறித்த கலந்துரையாடலில் விவசாய உற்பத்தி, ஏற்றுமதி, சந்தையை ஏற்படுத்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இன்றைய விசேட கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் ஜி.எ.சந்திரசிறி, ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், வடமாகாணத்தைச் சேர்ந்த அரச அதிபர்கள், பிரதேச செயலாளர்கள்,
விவசாயத் திணைக்களப் பணிப்பாளர்கள், அகில இலங்கை விவசாயக் கூட்டுறவுச் சங்க தலைவர் நவரட்ண, விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள், சரத் பிரேம குமார, அத்துல பிரியந்த, சந்தண பிரியர், கே.எல்.பெரேரா எனப்பலரும் கலந்துகொண்டனர்{புகைப்படங்கள்,}
0 கருத்துகள்:
கருத்துரையிடுக